January 5th, 2009

Back after the Xmas Break

Happy New Year and all that.

**

A silly doubt related to New Year celebrations. If you observe the fireworks at Sydney, Hong Kong etc., there weren’t any smoke (If there was, it was very less) at all, where as the fireworks at Berlin and London emitted quite a lot of smoke. Is it because of the weather or is there any other funda?

**

Almost forgot to come back to work after 11 days of holidays. Given the business climate these days, one has to be happy for having got a place to go to work every morning. I have never been at home continuously for these many days. Slept late, woke up late, watched movies, read books, spent time with Anirud and what not. Dubukkus visited us for a couple of days, as has been our custom to meet up during Xmas break every year (though we do meet up at every conceivable opportunity during the year). I should say that we re-lived our days of late 90s and early 2000s with out endless chat on all things non-sense. Those 2 days are easily the greatest two days in my recent memory.

**

New Year began with a bang. My broadband conked out one fine morning. My telephone service provider (TSP) says that the line is good and clear for anyone to provide BB service, whereas my ISP says that there is something wrong with the line for them to resume the service. Apparently, both of them wouldn’t talk with one another and want me to do the talking. As if this is not enough, both my TSP and ISP don’t want to take any instructions from me and they would only listen to my employer, who actually pays the bills. By the end of the week, we learnt how to live without Internet. Looking at the positive side, we are discovering various titles we have on our book shelf, which would otherwise have gathered dust. Seems that it will take a week for the BB service to resume.

Posted in General, UK| 1 Comment »

December 24th, 2008

Swear Box

At some point last month, I did believe that before I make another entry in this blog, Barack Obama would have already spent half his term at the Oval office. well.. there goes my commitment towards maintaining this blog.

***

Christmas time reminds me of ’swear box’ concept that was run in a particular department at my friend’s office. The concept is that, they have a rate for each of the common swear words. Something like - 50 pence for that popular four letter ‘F’ word, 2 pounds for the four lettered word that begins with ‘C’ etc. Whenever anyone (be it a visitor or those who were working in that area) swears, they have to pay the appropriate amount, which will go into a money box christened as ‘Swear Box’. The box would be opened up prior to Christmas time and will be used to buy gifts for those in that department. There will be clear warning that the above concept is in operation in that area and also the rate chart for various words used to be put up prominently. Even if one is very careful with the choice of words, it will be funny to see people provoking one another. No wonder the box used to get filled up very quickly. This may sound skewed, but it is something to cheer up an otherwise monotonous work life.

***

Recently, we were there at our friend’s (Vijay-Priya) place in Croydon. They decided to pull my leg in a different way by putting up posters like this all over their home. As you could see, the posters welcome the ‘writer (he he.. me!)and his family’. As if the posters were not enough, Vijay came out with a reason for the choice of words by claiming that anyone can be a blogger, but only very few can be writers. He did fail to mention what I had written - apart from my name perhaps. I wouldn’t have pardoned them for this, but the yummy ’saatrumadhu’ (rasam) prepared by Priya changed my mind once and for all. :)

***

Merry Christmas to those of you who celebrate. Happy New Year to all of you folks out there.

November 5th, 2008

Barack Obama

Congratulations Barack Obama. Let the ‘change’ be for real.

I have been following the news & analysis this morning and watching him make the speech at Chicago, I felt really happy. For some unknown reason, felt proud too. Let the world be a better place under his leadership.

October 28th, 2008

தீபாவளி கொண்டாட்டம்

கடந்த 9 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டைத் தவிர (2007) மற்றெல்லா வருடங்களும் தீபாவளியன்று இங்கிலாந்தில் தான் இருந்திருக்கிறோம். சொல்லி வைத்தாற் போல தீபாவளி வார நாட்களில் தான் வரும். வருடம் தவறாமல் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து விடுவேன். இருந்தாலும், கொண்டாட்டம் என்பது காலையிலிருந்து நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் வாழ்த்தனுப்பி விட்டு, நன்றாக சாப்பிட்டு, ஊருக்கு தொலைபேசுகையில் பட்டாசு சத்தத்தின் நடுவே குசலம் விசாரிப்பதுடன் முடிந்து விடும். இந்த மாதிரி நேரங்களில் தான் எப்பொழுது இந்தியா திரும்பப் போகிறோம் என்ற ஏக்கம் அதிகமாக இருக்கும்.

ஆனால், இந்த முறை சற்று வேறு மாதிரியாக இருந்தது. நாங்கள் புதிதாக வசிக்கத் தொடங்கியுள்ள குடியிருப்பில், எங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒரு தமிழ் குடும்பமும் உள்ளனர். ஆக, இரு வீட்டு பெண்மணிகளும் தங்கள் பங்குக்கு சிற்றுண்டி வகைகளும், இனிப்புகளும் செய்து - அதே குடியிருப்பில் வசிக்கும் இந்நாட்டவர்கள் சிலரை குடும்பத்துடன் அழைத்து ஒரு சிறிய அளவிலான கொண்டாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தோம். குழந்தைகள் நால்வர், பெரியவர்கள் 10 பேர் என சிறிய ஆனால் கலகலப்பான கூட்டம். நரகாசுரனுக்கு கொஞ்சம் அதிகமாகவே கண், காது, மூக்கு வைத்து தீபாவளி எதனால் கொண்டாடப்படுகிறது என்ற கேள்விக்கு ஆங்காங்கே ரீல் ஓடிக் கொண்டிருந்தது. குலாப் ஜாமுனை முழுங்கி விட்டு, “வாவ், தட் வாஸ் டெலிஷியஸ்.. ஹவ் டிட் யூ மேக் இட்?” என்று வெள்ளைக்காரர்கள் உதிர்த்த சம்பிரதாய வார்த்தைகளை உண்மையென நம்பி தங்கமணி செய்முறை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தது தனிக்கதை. சும்மா சொல்லக் கூடாது, கேட்டவர்களும் இதோ உடனே போய் வாணலியில் எண்ணெய் வைக்கப் போகிற மாதிரி நன்றாகவே தலையாட்டினார்கள். குழந்தைகள் நால்வரையும் நேராகப் பார்க்க வைத்து ஒரு புகைப்படம் எடுக்க கேமரா வைத்திருந்த அனைவரும் கஜினி முகம்மது கணக்கில் கடும் முயற்சி எடுத்து புறமுதுகிட்டனர்

அனைவரும் - குறிப்பாக குழந்தைகள் நால்வரும் மகிழ்வாக உணர வேண்டுமென்பதற்காக நிறைய மத்தாப்புகளை வாங்கி வைத்திருந்தோம். அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு மத்தாப்புகளை கொளுத்தியது சந்தோஷமாக இருந்தது. பொதுவாகவே இந்த நாட்டு மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அளவுக்கு அதிகமாகவே கடைப்பிடிப்பார்கள். அதற்காக ஒரு புஸ்வாணத்தைக் கொளுத்துவதற்க்குள் 50 அடி தள்ளிப் போய் நிற்பதெல்லாம் ரொம்பவே அதிகம். சர வெடியை கையில் வைத்து பற்ற வைத்தும், லட்சுமி வெடியை சாணிக்குள் நிறுத்தி வெடித்தும் - வீரத்தை விளைவித்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவன் நான் என்பதை புரிந்து கொள்ளாதது அவர்களுடைய துரதிர்ஷ்டம்.

சில பட்டாசுப் பெட்டிகளை என்னவென்றே தெரியாமல் வாங்கினாலும், அவை நன்றாகவே இருந்தன. குறிப்பாக, சிறு சிறு பல-வண்ண ராக்கெட்டுகளாக மேலே எழும்பிச் சென்று அழகிய வண்ண பூக்களாக வெடித்த அந்த பட்டாசு மிகவும் அருமை. பட்டாசுகள் தீர்ந்தவுடன், கொண்டாட்டங்களும் இனிதே நிறைவுபெற்றன. வந்திருந்த இந்நாட்டு பெண்கள் - இந்தியப் பெண்களுக்கு கை குலுக்கி, பூங்கொத்து அளித்து தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர், ஆண்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதோடு இறுக்கி அணைச்சு உம்மாவெல்லாம் கொடுத்தனர். அடுத்த தீபாவளிக்கு இன்னும் பலரை அழைக்க வேண்டும். ஹ்ம்ம்.

October 24th, 2008

கெட்-டுகெதர் (Get-Together)

கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னரே எழுத நினைத்திருந்த பதிவு. இப்பொழுது தான் எழுத நேரம் வாய்த்தது.

—–

“நான் இந்த வருஷம் தீபாவளிக்கு திருச்சி வரேன். நீயும் அங்க தானே இருப்பே? மீட் பண்ணுவோமா?” - நண்பர்கள் இருவருக்குள் மேற்கண்டவாறு தொடங்கிய ஒரு சாதாரண மின்னஞ்சல் உரையாடல் வெகு சில மணி நேரங்களில் வளர்ந்து, பெரியவனாகி பல்லாண்டுகளுக்கு பின்னர் கல்லூரி நண்பர்கள் பலர் கூடி, சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கித்தந்தது.

திருச்சி தேசிய மாலை நேரக்கல்லூரியில் 1996-ஆம் ஆண்டு, இளம் அறிவியல் பட்டத்திற்கான மூன்றாண்டு படிப்பை நிறைவு செய்தவுடன் ஒரு உச்சி வெயில் நாளில் நடந்த பிரிவு உபசார விழாவின் பொழுது அந்த அளவிலான அடுத்த சந்திப்பு நடக்க பதினொரு ஆண்டுகள் ஆகுமென நினைக்கவில்லை. நாங்கள் படித்து முடித்த காலத்தில் மின்னஞ்சல், ஓர்குட் போன்ற சங்கதிகள் ஏதும் வந்திருக்கவில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்த வெகு சில மாதங்களிலேயே நெருங்கிய நண்பர்கள் தவிர மற்றவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு விட்டுப் போனது. மிஞ்சிப் போனால் 10 பேருக்கு மேல் எவரையும் இப்பொழுது தொடர்பு கொள்ள முடியாது என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, நண்பன் ஒருவன் சலிக்காமல் ஒவ்வொருவருக்கும் கைப்பட கடிதமெழுதி தொடர்பு கொண்டு மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்தான்.

தீபாவளிக்கு மறுநாள் கல்லூரியிலேயே அவரவர் குடும்பத்தினருடன் சந்திப்பதென முடிவாயிற்று. கல்லூரி உள்ள திண்டுக்கல் சாலையில் நுழையும் போதே சிலிர்ப்பாக இருந்தது. 11 வருடங்களில் கல்லூரி நிறைய மாறிவிட்டிருந்தது. எல்லாம் மகிழ்ச்சி தரும் நிறைவான மாற்றங்கள். நாங்கள் இறுதி வருடம் படித்த வகுப்பறையை எங்கள் சந்திப்புக்கென திறந்து வைத்திருந்தார்கள். நான் வழக்கமாக உட்காரும் கடைசிக்கு முன் வரிசையில் அமர்ந்தவுடன் மலர்ந்த நினைவுகளை வைத்து ‘ஆட்டோகிராப்-2′ எடுத்துவிடலாம். மர பெஞ்சுகளில் வழக்கம் போல பல பெண்களின் பெயர்கள். பெயர்களில் மட்டும் மாற்றம். அவ்வளவே. வகுப்பில் படித்த பாதிக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். படிக்கும் சமயத்தில் ஆரம்ப கால தனுஷ் போல ஒல்லிப்பிச்சானாக இருந்த பசங்களெல்லாம் தடி மாடுகளாக மனைவி, மக்களுடன் வந்து நின்றார்கள். அனைவர் முகத்திலும் பரவசம். பசங்களின் உருவம் தான் மாறியிருந்ததே தவிர பேச்சும், செய்கைகளும் அதே மாதிரி தான் இருந்தன. Boys are always boys என்பதை மீண்டும் நிரூபித்தோம்.

இந்த சந்திப்பிற்கு எங்களுக்கு பாடம் நடத்திய, நாங்கள் மிகவும் மதிக்கின்ற இரண்டு விரிவுரையாளர்களையும் அழைத்திருந்தோம். விடுமுறை நாள் என்பதை பொருட்படுத்தாது நெடுந்தொலைவிலிருந்து அவர்களும் வந்திருந்தனர். சொல்லப் போனால் எங்களை விட அவர்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். அவரவர் பார்க்கும் வேலை, குடும்ப விவரங்கள், கல்லூரி கால காதல் என வாய் வலிக்க வலிக்க பேசினாலும் சலிக்கவேயில்லை. பதின்ம வயது முரட்டுத்தனத்துடன், அனைவரையும் எகிறி, “நீயெல்லாம் எங்கே உருப்பட போறே” என்று ஏகமனதாக அனைத்து ஆசிரியர்களிடமும் அவ்வப்போது ஆசீர்வாதம் வாங்கிய நண்பனொருவன் மிக மென்மையானவனாக மாறி, சிறு நிறுவனமொன்றை தொடங்கியிருப்பதை கூறியது அனைவருக்கும் இனிய அதிர்ச்சி. இரண்டு மணி நேரம் பேசிக் கலைவோம் என எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு முழுநாள் நீடித்தது தீபாவளி பட்சணங்களை விட அதிகமாக இனித்தது. இதை சாத்தியமாக்க கை வலிக்க அனைவருக்கும் லெட்டர் எழுதியவனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

மகிழ்ச்சிகரமான விஷயங்கள் ஒரு புறமிருக்க, every coin has got its other side. எங்கள் வகுப்பில் படித்த பலர் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் நல்ல வேலை, வளங்களுடன் இருந்து வந்தாலும், வாழ்வின் மறுபக்கத்தை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கும் பலரில் எங்கள் வகுப்பு நண்பர்கள் சிலரும் உள்ளனர் என்பதையும் இந்த சந்திப்பு மூலம் தெரிந்து கொண்டேன். துணிக் கடைகளிலும், பாத்திரக் கடைகளிலும் எடுபிடி வேலைகளில் மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஊதியம் பெற்று வாழ்க்கையை ஓட்டும் சிலரும் எங்களுடன், அதே வகுப்பறையில் தான் அமர்ந்து படித்தனர் என்பதை அறிந்த பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த நண்பர்களைக் கண்டறிந்து உதவிடும் நோக்கத்தோடு சில திட்டங்களை அன்று யோசித்தோம். ஆனால், அன்றிருந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் முடிவேதும் எடுக்க இயலாமல் போய்விட்டது. இது நடந்து ஒரு வருடம் வரை இதை நாங்கள் மறந்து விட்டது எங்களது பொறுப்பின்மை. இப்பதிவை திடீரென உயிர்ப்பித்தது போல், இந்த விஷயத்திற்கும் விரைவில் செயல் வடிவம் கொடுப்போம் என நம்புவோம்.

இவ்வாறான அடுத்த சந்திப்பு என்று, எங்கு அமையும் எனத் தெரியவில்லை. அது நிகழும் வரை 2007 வருட தீபாவளி சந்திப்பு நிகழ்வுகள் மனதில் நெடு நாள் நிலைத்து நிற்கும். அடுத்த முறை சந்திக்கும் பொழுது எவருக்கும், எக்குறையுமின்றி இதை விட மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் அமையும் என உறுதியாக நம்புகிறேன்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

October 17th, 2008

ஜாகிங்

SPB மாதிரி உடம்பிருந்தாலும் எடையில் சதமடித்துவிட்டு உடம்பை குறைப்பது தான் நல்லது என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தேன். யார் கண் பட்டதோ தெரியவில்லை - “கார்த்தால எழுந்து சும்மா உட்கார்ந்திருக்கற நேரத்துல கொஞ்ச நேரம் ஜாகிங் பண்ணிட்டு வந்த உடம்பாவது குறையுமே” என்று தங்கமணி உசுப்பேத்திவிட வேறு வழியில்லாமல் கொள்கையை சற்றே தளர்த்திக் கொண்டு நானும் ஓடத் தொடங்கினேன். மாடிப்படி இறங்குவதற்குள் எதற்கும் இருக்கட்டும் என்று ‘’இன்றிலிருந்து தினமும் 45 நிமிஷம் ஜாகிங் செய்வது” என்ற திடீர் சபதம் ஒன்றை வேறு எடுத்து வைத்தேன்.

காலை ஆறரை மணிக்கு விடிந்தும் விடியாத காலைப் பொழுது மிக ரம்மியமாகத்தான் இருந்தது. தெருவில் குப்பை அள்ளுபவர்களிலிருந்து, சக ஜாகர்கள் வரை அனைவரும் “மார்னிங் மேட்” என விளித்து புன்னகைப்பது நல்ல விஷயமாகவே பட்டது. ஆனால், எல்லாம் தெரு முனை தாண்டும் வரை தான். 200 மீட்டர் ஓடுவதற்குள் கண்டபடி மூச்சு வாங்கினாலும், அதற்குள் ரிடையர் ஆவது கேவலமாக இருக்குமென்பதால் இன்னும் ஒரு 50 மீட்டர் ஓடினேன். குளிரைப் பொருட்படுத்தாது கர்சீப் துணி உடையணிந்து, ஐபாடில் பாட்டு கேட்டுக்கொண்டு ஓடிய ஒரு குதிரையும், அந்த குதிரைக்குப் பின்னால் ஓடிய ஒரு தாத்தாவும் என்னை மூச்சிரைக்க வைத்தார்கள். இப்படி கஷ்டப்பட்டு அரை கிலோமீட்டர் ஓடிய பின்னர் இத்தகைய வீர விளையாட்டுகள் எல்லாம் நமக்கு சரிப்படாது என்று வீடு திரும்பிவிட்டேன்.

வீட்டுக்கு வந்தவுடன் அனிருத் கேட்ட ஒரு கேள்வி “ஆஹா, இவனை கேட்காம போய்ட்டோமே” என எண்ண வைத்தது. அக்கேள்வி - “நீ கார்ல ஜாகிங் போயிருக்கலாமே பா. சீக்கிரம் திரும்பி வந்திருக்கலாம்ல?”.

October 10th, 2008

யவன ராணி

சில வருடங்களுக்கு முன்னர் சாண்டில்யனின் ‘ஜல தீபம்’ புத்தகத்தை (மூன்று தொகுப்புகள்) என் தங்கமணி எனக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். கதை நன்றாக இருந்தாலும், சில சொல்லாடல்களை திரும்ப திரும்ப உபயோகித்திருந்தது ஜல தீபத்தை ஒரு சுமாரான நாவலாக்கியது. ஜல தீபம் படிப்பதற்கு சில மாதங்கள் முன்னர் தான் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படித்திருந்ததால் சாண்டில்யனின் மேல் சொல்லும்படியான அபிப்பிராயம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை.

ஆனால், கடந்த சில நாட்களாக கீழே வைக்க முடியாமல் படித்து இன்று காலை முடித்த ‘யவன ராணி’, சாண்டில்யன் மேல் நான் கொண்டிருந்த ‘சுமாரான எழுத்தாளர்’ என்ற பிம்பத்தை கிழித்தெரிந்தது. கிட்டத்தட்ட 1800 வருடங்கள் முன்னர் நடைப்பெற்ற கதை. கரிகாலன் என்றவுடனேயே முடிவு தெரிந்து விட்டாலும், கதையில் ஆங்காங்கே வைத்த திருப்பங்களும் , நிகழ்ச்சிகளை படிப்பவர் கண் முன் நிறுத்தும் லாவகமும் யவன ராணியை ஒரு முழு நீள விறுவிறு நாவலாக்கின. ஒரு பெண்ணின் அழகை இப்படியெல்லாம் விவரிக்க முடியுமா என வியக்க வைக்கும் ஆளுமை இந்தப் புத்தகத்திலுண்டு. யவன ராணி என்ற பாத்திரம் கதையின் போக்கில் வந்தாலே - அந்தப் பெண்ணின் அழகு உருவத்தையும், அலட்சியம் கலந்த கம்பீரத்தையும் நம்மை உணர வைப்பது எழுத்தாளாரின் வெற்றி. இப்படிப்பட்ட புதினத்தை வேக வேகமாகப் படித்துக் கொண்டிருந்த பொழுது, திடீரென்று சுமார் 20 பக்கங்கள் புத்தகத்தில் காணாமல் போய்விட்டால் எப்படி இருக்கும்? அந்தப் பிரதியை பைண்டு (bind) செய்தவரை நன்றாகத் திட்டிக் கொண்டே படித்தேன். நல்ல வேளையாக, எங்கிருந்து பார்த்தாலும் புரியும் தமிழ் படம் மாதிரி கதையின் நிகழ்வுகளில் அதிகம் இழந்துவிடவில்லை. டை ஒன்றை கட்டிக் கொண்டு சன் டிவி திரை விமரிசனம் போல சொல்ல வேண்டுமென்றால் “யவன ராணி - கதைகளின் ராணி”.

October 8th, 2008

கல்யாண சமையல் சாதம்….

பண்டிகை நாட்களில் விடுமுறை இல்லாது, அலுவலகம் செல்வதென்பது மிகப் பெரும் கொடுமைகளுள் ஒன்று. ஆனால், என்னைப் போல வீட்டிற்கு அருகே அலுவலகம் இருப்பதில் ஒரு வசதி - மதிய உணவிற்க்கு (குறிப்பாக பண்டிகை நாட்களில்) வீட்டுக்கு சென்று வரலாம். இன்று அவ்வாறு வீட்டிற்குச் சென்றால் தலைவாழை இலை போடாதது தான் பாக்கி என்ற அளவில் வடை, பாயசத்துடன் ஒரு அட்டகாசமான கல்யாண சாப்பாடு. நான் சாப்பிட்ட அளவிற்கு காரை ஓட்டிக் கொண்டு வந்திருக்கக் கூடாது - தள்ளிக் கொண்டு தான் வந்திருக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிட்டு இங்கு வந்து உட்கார்ந்ததன் பலன் தூக்கம் சொக்கிக் கொண்டு வருகிறது. எனது தற்போதைய கவலை - அலுவலகத்தில் தூங்கி விடுவேனோ என்பது கூட அல்ல. குறட்டை விட்டு தூங்கக் கூடாதே என்பது தான்.

September 26th, 2008

Rant

Its a while since I wrote something here. It is a different matter that it didn’t matter to anyone. Its not that I was busy or anything like that. I found time for almost everything and yet didn’t type a word here. Had I been a writer, it would have been a bit fancy to call this a writer’s block. Simple reason for not showing up here is that I didn’t have the mood. I am very surprised when I think how active I was in the blog world few years ago and wonder if I be like that again.

August 13th, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ்

“கோலாகலம்” என்ற வார்த்தையின் அர்த்தத்தை சீனாவில் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் துவக்கவிழாவை தொலைக்காட்சியில் பார்த்தபோது தான் உணர்ந்தேன். விழா துவங்கும் முன்னர் நடந்த countdown-லிருந்து ஒவ்வொரு செய்கையிலும் பிரமிப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தனர். சீனாவின் கண்டுபிடிப்புகளான காகிதம், அச்சு இயந்திரம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்து காண்பித்த நிகழ்ச்சி - அப்பப்பா.. என்னவொரு கற்பனை, என்னவொரு திட்டமிடல், எப்பேர்ப்பட்ட செயலாக்கம். நினைத்தாலே புல்லரிக்கிறது. ஒலிம்பிக்ஸ் துவங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே சீனாவைப் பற்றி வந்திருந்த சர்ச்சைகளையெல்லாம் இந்த நிகழ்ச்சிகள் சுத்தமாக மறக்கடித்து விட்டன. அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டி 2012 லண்டனில் நடக்கவிருக்கின்றன. பெய்ஜிங் தந்த பிரமிப்பின் அளவில் லண்டன் எவ்வளவு தரும் என்ற கவலை தான் கடந்த சில நாட்களாக மனதில் இருக்கிறது.

நான் வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனம் பல வருடங்களாக ஒலிம்பிக் போட்டிகளில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றது. நடந்து கொண்டிருக்கும் பெய்ஜிங் ஒலிம்பிக்சிலும் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் முதல், விளக்குகள், அதிநவீன மருத்துவ கருவிகள் என்று பல இடங்களில் எங்கள் நிறுவனத்தின் பொருட்கள் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், ஒலிம்பிக்ஸ் என்றாலே எங்கள் நிறுவனத்திற்கு ‘நம்ம வீட்டு கல்யாணம்’ என்பது போல குஷி தான். தினமும் ஏதாவது ஒரு போட்டி வைத்து, ஒலிம்பிக்ஸ் வளையங்கள் சின்னம் பொறித்த ஜட்டி முதல் ஜாக்கெட் வரை ஏதாவது பரிசளித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் முட்டி மோதி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒரு ஜ… சரி, வேண்டாம்… ஒரு பேனா கூட கிடைக்கவில்லை.

இது போதாதென்று உலகம் முழுதுமுள்ள எங்கள் நிறுவன அலுவலகங்களிலிருந்து 50 சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து ஒலிம்பிக்ஸ் துவக்க விழாவிற்கு அனுப்பினார்கள். என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் நேற்று தான் பெய்ஜிங்கிலிருந்து ஏகப்பட்ட புகைப்படங்களுடனும், கதைகளுடனும் திரும்பினார். எதிலுமே first hand account கேட்பது சுவையாகத் தான் இருக்கிறது. என்னையெல்லாம் அனுப்ப மாட்டீர்களா என்று விசாரித்தேன். சும்மா உட்கார்ந்து ப்ளாக் அடிக்கரவனுக்கெல்லாம் அதெல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டனர்.

அது போகட்டும். நம்மூரிலிருந்து போய் தங்கத்தை சுட்டு வந்த அபிநவ் பிந்த்ரா ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறார் தெரியுமா? பல சிக்கல்களைத் தாண்டி, முன் மாதிரியாகக் கொள்ள நபர்களும் யாருமின்றி இந்தியாவிலிருந்து ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வதென்பது அவ்வளவு சுலபமல்ல. விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை ஈட்டித் தந்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Abhinav Bindra, Take a bow Sir!